புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தமிழ் ரசிகர்களை 30 ஆண்டுகளாக தனது மெல்லிசையால் தாலாட்டியவர் எம்.எஸ்.விஸ்வாதன், பிறப்பில் மலையாளியாக இருந்தாலும், இசையில் தமிழனாக வாழ்ந்தவர். இந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தவர், 50 படங்களுக்கு மேல் நடித்தவர்.
தமிழ்த்தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த' பாடலுக்கு இசை அமைத்து காலத்தை கடந்தும் ஒலிக்கச் செய்தவர். மழைக்குகூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் இணையற்ற இசைப்பள்ளியாகத் திகழ்ந்தார்.
இப்படிப்பட்ட மாமேதைக்கு அரசு விருதுகள் பெரிதாக வழங்கப்படவில்லை. தலா ஒரு முறை ஆந்திரா மற்றும் மலையாள அரசின் விருதுகளை பெற்றார். தமிழக அரசு கவுரவ விருதும், கலைமாமணி விருதும் மட்டுமே வழங்கியது. இவரது பாடல்கள் தேசிய விருது பெற்றாலும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை இவர் பெறவில்லை.
மெல்லிசை மன்னருக்கு விருதுகள் வந்து சேராதது குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது "எம்.எஸ்.வி விருதுகள் மீது நாட்டம் இல்லாதவர். தேடி விருது பெறும் அளவிற்கு திறமை இல்லாத கூச்ச சுபாவம் உள்ளவர். சில விருது பெற்றவர்கள் குறித்து அவரிடம் சொன்னார். விருது கொடுக்கிறவங்க அறிவாளிகள்தானே அவர் நல்லா இசை அமைச்சதனால அவருக்கு கொடுத்திருக்காங்க இதுல என்ன தப்புங்றேன்... என்று வெகுளியாக சொல்வார்" என்கிறார்கள்.
விருதுகளை கடந்து வாழ்ந்த இந்த இசை மேமையின் 10வது நினைவு நாள் இன்று.




