22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் திலகம் சிவாஜி 'பராசக்தி' படத்தில் நடிப்பதற்கு முன்பு தீவிரமாக வாய்ப்பு தேடி வந்தார். அந்த காலகட்டத்தில் நாடகங்களிலும் நடித்து வந்தார். 1951ம் ஆண்டு தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் வெளிவந்த படம் 'நிரபராதி'. தெலுங்கில் இதன் பெயர் 'நிர்தோஷி'. இதை ஹெச்.எம்.ரெட்டி இயக்கினார், முக்காமலா கிருஷ்ணமுர்த்தி என்ற வழக்கறிஞர் நாயகனாக நடித்திருந்தார். அஞ்சலி தேவி இரண்டு வேடங்களில் நடித்தார். இவர்களுடன் ஜி.வரலட்சுமி, கொன்னா பிரபாகர் ராவ், கைகல சத்யநாராயணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் நாயகனான முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரியாது. எனவே அவருக்கு டப்பிங் குரல் கொடுக்க முடிவு செய்தார் இயக்குனர் ரெட்டி. அப்போது அந்த படத்தில் நடித்த அஞ்சலி தேவி 'எனக்கு தெரிந்து கணேசன் என்ற பையன் இருக்கிறான். மேடை நாடகங்களில் நன்றாக தமிழ் பேசுகிறான். அவனை அழைத்து பேச வையுங்கள்' என்றார். ரெட்டியும் சிவாஜியை அழைத்து பேசி அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசி டப்பிங் பேச வைத்தார்.
அன்றைக்கிருந்த நிலையில் சிவாஜிக்கு அந்த பணம் பெரியது என்பதால் டப்பிங் பேசினார். ஆனால் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறாததால் சிவாஜிக்கு முன்பணமாக கொடுத்த 200 ரூபாயோடு சரி. மீதி பணத்தை கொடுக்கவில்லை.
ஆக, சிவாஜியின் குரல்தான் முதலில் சினிமாவில் அறிமுகமானது. சினிமாவில் டப்பிங் கலைஞராகத்தான் சிவாஜி தன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். சினிமாவிற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் 200 ரூபாய்.