அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

100 கோடி, 200 கோடி, 500 கோடி, 1000 கோடி வசூல் என கடந்த சில வருடங்களாக இந்திய அளவில் சில பல படங்களின் வசூல் விவரங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் எது உண்மை, எது பொய் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் 'டிராக்கர்கள்' என சொல்லிக் கொண்டு பலரும் பல்வேறு விதமான பொய்த் தகவல்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. சமயங்களில் குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளர் சொல்லும் வசூல் கூட பொய்யான தகவல் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கெல்லாம் அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் சொன்னால் கூட நம்பலாம். அந்த விதத்தில் மலையாள சினிமா உலகில் கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மலையாளப் படங்களின் வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது..
கடந்த மார்ச் மாதத்தில் வெளியான படங்களின் பட்ஜெட், அதன் மூலம் கிடைத்த பங்குத் தொகை ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி மோகன்லால் நடித்து வெளிவந்த 'எம்புரான்' படம் 175 கோடியே 66 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும், அதன் மூலம் முதல் 5 நாட்களில் 24 கோடியே 65 லட்சம் பங்குத் தொகை கிடைத்தது என்ற விவரமும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட 15 படங்களின் பட்ஜெட், பங்குத் தொகையில் இதுதான் அதிகமானது.
இது போன்ற விவரத்தை தமிழ்த் திரையுலகத்திலும் அளித்தால் தேவையற்ற சண்டைகள், சர்ச்சைகள் வருவது நின்று போகும். செய்வார்களா ?.