மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா |
மலையாளத் திரையுலகத்தின் யதார்த்த கதாநாயகர்களில் ஒருவர் மோகன்லால். அவர் ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்த 'எம்புரான்' படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் அவரது பாணியில் நடித்த 'தொடரும்' படம் நேற்று வெளியாகி மலையாள ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் - ஷோபனா ஜோடி இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்புக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் மோகன்லால்.
'தொடரும்' படத்திற்கான அன்பு மற்றும் வரவேற்பால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பாராட்டு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னைத் தொட்டுள்ளன.
இந்தக் கதைக்கு உங்கள் இதயங்களைத் திறந்ததற்கும், அதன் ஆன்மாவைப் பார்த்ததற்கும், அதை இவ்வளவு கருணையுடன் ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்த பயணத்தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு பிரேமிலும் தங்கள் அன்பையும், முயற்சியையும், உணர்வையும் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் இது சொந்தமானது.
ரெஞ்சித் எம், தருண் மூர்த்தி, கே.ஆர். சுனில், ஷோபனா, பினு பப்பு, பிரகாஷ் வர்மா, ஷாஜி குமார், ஜேக்ஸ் பிஜாய், நிஷாத் யூசுப், ஷபீக் வி.பி. மற்றும் எங்கள் அசாதாரண குழுவினருக்கு, உங்கள் கலைத்திறன் மற்றும் ஆர்வம் 'தொடரும்' படத்தை இப்படியாக மாற்றியது.
இந்தப் படம் கவனத்துடன் உண்மையுடன் உருவாக்கப்பட்டது. இது இவ்வளவு ஆழமாக எதிரொலிப்பதைக் காண்பது ஒரு வெகுமதியை விட அதிகம். இது ஒரு உண்மையான ஆசீர்வாதம். என் முழு மனதுடன், நன்றி. எப்போதும் அன்புடனும் நன்றியுடனும்,” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.