வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

'இவன் தந்திரன்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு விக்ரம் வேதா, ரிச்சி, நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் கதையின் நாயகியாக நடித்த படம் 'விட்னஸ்'. அதன்பிறகு 'இறுகப்பற்று' என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார்.
தப்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு 'கலியுகம்' படத்தின் மூலம் மீண்டும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மே 9ல் ரிலீசாகிறது. போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கி உள்ளார். ஆர்.கே இன்டர்நேஷனல், பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், இனியன் சுப்ரமணி, அஜ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். வரும் மே மாதம் 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறியதாவது: ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும். இவ்வாறு கூறினார்.




