விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று திரைக்கு வந்து அஜித் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு பிரபலங்களும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில், குட் பேட் அக்லி படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் . அதோடு கூலி படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறிய ரஜினிகாந்த் , மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி. ரொம்ப நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.