தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? |
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவில் புதிதாக சில பல பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த பின் நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் பலரும் சென்னை திரும்பி விட்டனராம். ஆனால், தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வந்த சிலர் இன்னமும் இலங்கையில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் படப்பிடிப்பு நடத்தியதற்கான செலவுத் தொகையை தயாரிப்பு நிறுவனம், அங்கு படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு இன்னும் தரவில்லையாம். அதனால், அவர்களது பாஸ்போர்ட்களை அந்நிறுவனம் வாங்கி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது நடந்த செலவுக்கும் அதைத் தயாரித்த நிறுவனம் பாக்கி வைத்துவிட்டுப் போனதாம். அப்படி இந்த 'பராசக்தி' படத்திற்கு நடந்து விடக் கூடாதென்பதுதான் பாஸ்போர்ட் பிடுங்கல் என்கிறார்கள்.
இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா என கோலிவுட்டில் உள்ள தயாரிப்பு நிர்வாகிகள் கடிந்து கொள்கிறார்கள்.
'பராசக்தி' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி மீண்டும் ஆரம்பமாகவில்லை என்றும் ஒரு தகவல். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோருக்கிடையே ஏதோ பிரச்சனையாம். சுதாவின் அணுகுமுறையும் படத்தின் நடிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்று ஒரு பேச்சு.