பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம் | ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான மலையாள இயக்குனர் படம் | அமெரிக்காவிலிருந்து ஒன்றாக ஹைதராபாத் வந்திறங்கிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா | ‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! |
மலையாள திரை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் எம்ஜி ஸ்ரீகுமார். மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் காதலர் தினம், என் சுவாச காற்றே, தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்திற்கு இசையமைத்தது கூட இவர்தான். இந்த நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்றில் இவர் வீட்டில் இருந்து குப்பை கொட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகம் இவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராத தொகையையும் ஸ்ரீகுமார் கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அந்த ஆற்றில் படகு பயணம் செய்த போது ஏதேச்சையாக எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தான் இப்படி ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து ஆற்றில் குப்பை கொட்டப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படவே இந்த வீடியோவை வைத்து விசாரித்து அது எம்ஜி ஸ்ரீகுமாரின் வீடு தான் என்பதை கண்டுபிடித்து அதன் பிறகு அபராதம் விதித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.