ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

சமூக சேவகி சிந்துதாய் சப்கல், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ரக்மாபாய், சுதந்திரப்போராட்ட வீரர் கவுர் ஹரி தாஸ்தான் என மூன்று பயோபிக் படங்களை இயக்கியவர் ஆனந்த் மகாதேவன். இதில், 'சிந்துதாய் சப்கல்' படத்துக்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது.
பாலிவுட் குணசித்ர நடிகரான இவர் தமிழில் ரிதம், 2.ஓ, கேம் சேன்ஞ்ர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்கி உள்ள படம் 'புலே'. இந்த படம் இந்தியாவின் முதல் 'மகாத்மா' என்று அழைக்கப்படும் ஜோதிராவ் புலே, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் புலே தம்பதிகளின் வாழ்க்கை படமாகும். மகாத்மா காந்திக்கு முன்பே ஆங்கிலேயர்களுக்கு எதிரான அகிம்சை போராட்டத்தை முன்னெடுத்தவர், பெண் விடுதலை குறித்து பேசியவர், இந்திய அரசியல் சுதந்திரத்தைவிட சமூக சுதந்திரமே பெரியது என்று முழங்கியவர்.
படம் வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து ஆனந்த் மகாதேவன் கூறும்போது "புலே தம்பதி பற்றி பாலிவுட்டில் படம் வந்ததில்லை. 'காந்தி' படம் போல் காட்டவேண்டும் என இருவரின் சிறுவயது முதல் இறுதிக்காலம் வரை எடுத்துள்ளோம். செட் எதுவுமே போடாமல் அவர்கள் வாழ்ந்த புனே, கோலாப்பூர் என மகாராஷ்டிர சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கே படப்பிடிப்பு நடத்தினோம்.
புலே தம்பதியரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லை. ஓவியங்கள்தான் கிடைத்தது. அந்த ஓவியத்தைப் பார்த்ததும் பிரதிக் காந்தியும் பத்ரலேகாவும்தான் நினைவுக்கு வந்தார்கள். 'ஸ்கேம் 1992' சீரிஸில் ஹர்ஷத் மேத்தாவாகக் கலக்கியவர் பிரதிக் காந்தி. இந்தியா முழுக்க அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். 'இந்தப் படைப்பில் நீங்கதான் நடிக்கணும்'னு சொன்னதுமே அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிரதிக்கும் பத்ரலேகாவும் புலே தம்பதியருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்" என்றார்.




