Advertisement

சிறப்புச்செய்திகள்

தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் யார் என்று எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் பட நடிகை அதிர்ச்சி தகவல்

04 ஏப், 2025 - 01:36 IST
எழுத்தின் அளவு:
I-dont-even-know-who-I-am-says-Mani-Ratnam-film-actress
Advertisement

தொண்ணூறுகளின் துவக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அனு அகர்வால். 1993ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார். அதன்பிறகு ஹிந்தியிலேயே கவனம் செலுத்தி நடித்து வந்த அனு அகர்வால் 1999ல் ஒருநாள் மும்பையில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு தனது இருப்பிடத்திற்கு திரும்பிய போது மிகப்பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதில் இவருக்கு உடல் மட்டுமல்லாது முகம் முழுக்கவும் மிகப்பெரிய காயம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 29 நாட்கள் கோமாவிலேயே இருந்துள்ளார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது ஒரு யோகா டீச்சராக யோகா பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

தனக்கு நடந்த அந்த சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “எனக்கு அந்த விபத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய போது என்னை யார் என்றே எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்ல என்னை சுற்றி இருந்தவர்களை யார் என்று உணர்வதற்கே எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. சிகிச்சையில் இருந்தபோது என்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டியபோது அதிர்ந்து போனேன். காரணம் விபத்தால் என் முகமே மாறிவிட்டது. அதுமட்டுமல்ல பழைய நினைவுகள் நிறையவே மறந்து போய்விட்டது. நடப்பது, மற்றவர்களுடன் பேசுவது என்பதை எல்லாமே புதிதாக கற்றுக் கொண்டுதான் செயல்பட ஆரம்பித்தேன்.

பல மாதங்கள் படுக்கையிலேயே இருந்து சிகிச்சை பெற்று அதன் பிறகு யோகாவில் கவனம் செலுத்த துவங்கினேன். யோகா தான் என்னை மீட்டெடுத்து கொண்டு வந்தது. அதன் பிறகு யோகா ஆசிரியராக சான்றிதழும் பெற்று தற்போது யோகா பயிற்சி மையத்தை நடத்தி என்னை போன்ற பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னம்பிக்கை அளித்து வருகிறேன். அதன்பிறகு இந்த 25 வருடங்களில் நான் சினிமா பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார் அனு அகர்வால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் ... ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap