சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அப்போதிருந்த சென்னை மாகாண அரசு போருக்கு ஆதரவான படங்களையும், மக்களை அச்சத்தில் இருந்து மீட்கும் படங்களையும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து போரில் இந்திய வீரர்களின் தியாகம், ஆங்கில அரசின் நேர்மையான நிலைப்பாடு இவற்றை மையமாக கொண்டு படங்கள் வந்தன. இந்த படங்களுக்கு இடையே போரின் காரணமாக மக்கள் படும் அவஸ்தை மிக கடுமையான விலையேற்றம் இவற்றை கண்டித்தும், சென்னை மாகாண அரசை கிண்டல் செய்தும் வெளியான படம் 'மிஸ்.மாலினி'.
ஆர்.கே.நாராயண் எழுதிய 'மிஸ்டர் சம்பத்' நாவலை மையமாக வைத்து, கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை எழுதி இயக்கி அவரே நாயகனாகவும் நடித்த படம், கதாநாயகி மாலினியாக நடித்தவர் புஷ்பவல்லி. ஜாவர் சீதாராமன், எம்.எஸ்.சுந்தரி பாய், எஸ்.வரலட்சுமி உட்பட பலர் நடித்தனர். இதில்தான் ஜெமினி பிலிம்சில் மானேஜராக இருந்த கணேசன் சிறிய வேடம் ஒன்றில், அறிமுகமானார். பின்னர் அவர் ஜெமினி கணேசன் ஆனார்.
புகழ்பெற்ற நாடக நடிகையான மாலினி ஒரு சாதாரண மனிதனை காதலித்து அவனை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து பின்னர் மீண்டும் நாடகத்திற்கே திரும்பி வருவது மாதிரியான கதை.