ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
பிரபல நடிகை ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த ராதிகா, தற்போது நடிப்பு ஒருபக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராதிகா, 'நான் எப்போதும் என்னை பற்றியோ என் வேலை பற்றியோ பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது. படங்களில் நடித்து கொண்டிருந்த போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி பலனளிக்கவில்லை. மருத்துவர் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
அதேபோல் என்னுடைய மிக்கபெரிய தூண், வலிமை, தங்க இதயம் கொண்ட சரத்குமார் இந்த இரண்டு தினங்களாக என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்களை பாராட்டிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டு உலக பெண்கள் தினத்திற்கான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.