‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான காதல் படமாக அமைந்தது.
மீண்டும் ரீரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றோடு இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விடிவி கணேஷுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், திரிஷா, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
வீடியோவின் முடிவில் சிம்புவின் இதயத்தைத் தொட்டு 'இங்க என்ன சொல்லுது, ஜெஸி ஜெஸி சொல்லுதா' என விடிவி கேட்க, அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸி ஜெஸி சொல்லல, வேற சொல்லுது, அப்புறம் சொல்றன் வா,” என பதிலளித்து வீடியோவை முடித்துள்ளார்.
இப்போது யாரையாவது காதலிக்கிறாரா சிம்பு ?.