மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான காதல் படமாக அமைந்தது.
மீண்டும் ரீரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றோடு இப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான விடிவி கணேஷுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் இயக்குனர் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான், திரிஷா, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆகியோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
வீடியோவின் முடிவில் சிம்புவின் இதயத்தைத் தொட்டு 'இங்க என்ன சொல்லுது, ஜெஸி ஜெஸி சொல்லுதா' என விடிவி கேட்க, அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸி ஜெஸி சொல்லல, வேற சொல்லுது, அப்புறம் சொல்றன் வா,” என பதிலளித்து வீடியோவை முடித்துள்ளார்.
இப்போது யாரையாவது காதலிக்கிறாரா சிம்பு ?.