விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மேகா ஷெட்டி. கன்னட சீரியல் 'ஜோதே ஜோதேயலி' மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' உள்பட ஏழு படங்களில் நடித்துள்ளார் . அவரது அடுத்த படமான 'ஆப்டர் ஆபரேஷன் லண்டன் கபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதேநேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகா ஷெட்டி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இதற்காக அவர் தமிழ் மொழியும் கற்று வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது "சொந்த மொழியில் சாதித்த பிறகு பிறமொழிகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எழுவது இயற்கையானது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக இரண்டு மொழிகளையும் கற்று வருகிறேன். நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்.
சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே நானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.