பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

திரைப்படங்களில் சிறைச்சாலை தொடர்பான காட்சிகள் அந்த காலத்தில் சென்னை மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டது. சினிமா படப்பிடிப்புக்கு என்று தனி இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது புழல் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால் பெரும்பாலும் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.
சேலம் மத்திய சிறைச்சாலையில் நடந்த ஒரே படப்பிடிப்பு மேஜர் சுந்தரராஜன் இயக்கிய 'இன்று நீ, நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு தான். இந்தப் படம் சி.ஏ.பாலன் எழுதிய 'தூக்குமர நிழலில்' என்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த நாவலில் பாலன், சேலம் மத்திய சிறையில் நடந்த பல சம்பவங்களை எழுதியிருந்தார். காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிய அனுமதி பெற்று சேலம் சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. சேலம் ஆத்தூர் சாலையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான எல்.ஆர்.சண்முகத்தின் வீடு சிவக்குமாரின் வீடாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்; இளையராஜா இசையமைத்திருந்தார். சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்திற்கு பிறகு மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய இரண்டாவது படம் இது. ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.