நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகையும், தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி தனது 101வது வயதில் நேற்று காலமானார். 1924ம் ஆண்டு பிறந்தவர் சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வந்தார்.
பிரபல இயக்குனரான புல்லையா, குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'அனசுயா' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். அப்போது 'துலாபாரம்' நாடகத்தைப் பார்த்தவர் அதில் நடித்த கிருஷ்ணவேணியை 'அனசுயா' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தார்.
அப்போது கிருஷ்ணவேணிக்கு 10 வயது. அவருடன் 60 குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க அந்தப் படம் முழுவதுமாக கல்கத்தாவில் தயாரானது.
1937ல் சிஎஸ்ஆர் ஆஞ்சநேயலு, கிருஷ்ணவேணியை சென்னைக்கு அழைத்து வந்தார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்தார் கிருஷ்ணவேணி. சொந்தக்குரலில் பாடும் திறமையும் கொண்டவர்.
1940ல் மிர்சாபுரம் ராஜா என்ற பிரபல இயக்குனர், தயாரிப்பாளரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணவேணி. அதன்பின் கணவரது தயாரிப்பில் மட்டுமே நடித்து, அவர்களது ஷோபனாச்சலா ஸ்டுடியோவையும் நிர்வாகம் செய்து வந்தார்.
1942ம் ஆண்டு தெலுங்கு நடிகரான என்டி ராமராவை 'மனதேசம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணவேணி. அந்தப் படத்தை எல்வி பிரசாத் இயக்கினார்.
கிருஷ்ணவேணி மறைவுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.