இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழில் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மனோ சித்ரா. அதன் பிறகு நீர் பறவை, வீரம் மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக சினிமாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்மறையாக அமைந்தது.
தற்போது மனோ சித்ரா அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சினிமா பயணத்தில் ஏற்பட்ட தொய்வு குறித்து பேசியதாவது, "வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியில் இறந்துவிடுவார். அதன் பின் நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றனர். அதன்பிறகு தான் தெரியும் அது பொய் என்று. ஆனாலும் அஜித் சாருக்காக தான் நான் நடித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது" என தெரிவித்துள்ளார்.