காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழில் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மனோ சித்ரா. அதன் பிறகு நீர் பறவை, வீரம் மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக சினிமாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்மறையாக அமைந்தது.
தற்போது மனோ சித்ரா அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சினிமா பயணத்தில் ஏற்பட்ட தொய்வு குறித்து பேசியதாவது, "வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியில் இறந்துவிடுவார். அதன் பின் நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றனர். அதன்பிறகு தான் தெரியும் அது பொய் என்று. ஆனாலும் அஜித் சாருக்காக தான் நான் நடித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது" என தெரிவித்துள்ளார்.