பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

'அமரன்' படத்திற்கு பிறகு தெலுங்கில் 'தண்டேல்' படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்துள்ள சாய்பல்லவி, அதையடுத்து ஹிந்தியில் 'ராமாயணா' படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள ஒரு பேட்டியில், ''சிறுவயதாக இருந்தபோது நாங்கள் பெரிய பணக்காரர்கள் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு நாங்கள் வசதியான குடும்பம் அல்ல என்பது அதன்பிறகுதான் தெரியவந்தது. ஆனால் இப்போது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் உள்ளது. இதை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்,'' என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.
மேலும், சினிமாவில் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு தொகையை கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதோடு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மேலும், படிக்கிற மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது என பல சமூக பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.




