குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

தமிழ் சினிமாவில் பல வித திறமைகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என பல விஷயங்களை அறிந்தவர். 18 வருடங்களுக்கு முன்பே 'வல்லவன்' படத்தையும் இயக்கிவிட்டார். ஆனால், வேறு சில நடிகர்களுக்குக் கிடைக்கும் சிறந்த வாய்ப்பும், பிரபலமும், விளம்பரமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதோடு படம் பற்றிய அடுத்த அப்டேட் எதுவும் வரவில்லை. அப்படத் தயாரிப்பிலிருந்து கமல் பின் வாங்கிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அப்படத்தின் இயக்குனர். அதன்பின் புதிய தயாரிப்பாளரை சிம்புவும், தேசிங்குவும் சேர்ந்தே தேடி வருகிறார்களாம். சரித்திரக் கதை என்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகம். அதனால்தான் கமல் விலகியதாக ஒரு தகவல்.
இதனிடையே சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தேசிங்கு பெரியசாமி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை மறுபதிவு செய்து, “உண்மையில் மதிப்புள்ளதை நேரம் சோதிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கிடைக்க தாமதமாவது குறித்துத்தான் சிம்பு அப்படி பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது.