நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
தமிழ் சினிமாவில் பல வித திறமைகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என பல விஷயங்களை அறிந்தவர். 18 வருடங்களுக்கு முன்பே 'வல்லவன்' படத்தையும் இயக்கிவிட்டார். ஆனால், வேறு சில நடிகர்களுக்குக் கிடைக்கும் சிறந்த வாய்ப்பும், பிரபலமும், விளம்பரமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதோடு படம் பற்றிய அடுத்த அப்டேட் எதுவும் வரவில்லை. அப்படத் தயாரிப்பிலிருந்து கமல் பின் வாங்கிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அப்படத்தின் இயக்குனர். அதன்பின் புதிய தயாரிப்பாளரை சிம்புவும், தேசிங்குவும் சேர்ந்தே தேடி வருகிறார்களாம். சரித்திரக் கதை என்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகம். அதனால்தான் கமல் விலகியதாக ஒரு தகவல்.
இதனிடையே சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தேசிங்கு பெரியசாமி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை மறுபதிவு செய்து, “உண்மையில் மதிப்புள்ளதை நேரம் சோதிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கிடைக்க தாமதமாவது குறித்துத்தான் சிம்பு அப்படி பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது.