ரச்சிதாவா இப்படி : பயர் பாடல் வெளியானது | வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா | காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? |
கன்னட சினிமாவில் வெளிவந்த 'கே.ஜி.எப் 1 மற்றும் 2' படங்களை இயக்கியது மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதன் பிறகு பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, அதேசமயம் வசூல் 650 கோடியை கடந்தது.
சலார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் சலார் படத்தில் உள்ள சில குறைகள் குறித்து பேசியதாவது, "சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கே.ஜி.எப் படத்தின் மிகப்பெரிய வெற்றியினால் சலார் படத்தின் உருவாக்கத்தில் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேன் எனவும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தினால் சலார் 2ம் பாகம் எனது சிறந்த படமாக வரவேண்டும் என்பதற்காக திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.