நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

கன்னட சினிமாவில் வெளிவந்த 'கே.ஜி.எப் 1 மற்றும் 2' படங்களை இயக்கியது மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதன் பிறகு பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, அதேசமயம் வசூல் 650 கோடியை கடந்தது.
சலார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் சலார் படத்தில் உள்ள சில குறைகள் குறித்து பேசியதாவது, "சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கே.ஜி.எப் படத்தின் மிகப்பெரிய வெற்றியினால் சலார் படத்தின் உருவாக்கத்தில் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேன் எனவும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தினால் சலார் 2ம் பாகம் எனது சிறந்த படமாக வரவேண்டும் என்பதற்காக திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.