விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி |
தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் சில படங்கள் 1000 கோடி வசூல் சாதனையை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்தப் படங்கள் வெளியாகும் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெரிய படங்கள் வெளியாகும் ஒரு வாரத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இருந்தது. மேலும், அவற்றிற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அம்மாநில அரசுகள் அனுமதி அளித்தது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடந்த போது நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார். அதையடுத்து தெலங்கானா மாநில அரசு இனி, சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வும் கிடையாது என அறிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள தெலுங்குப் படங்களுக்கு அந்த வாய்ப்பு பறி போய்விட்டது. இதனால், அந்த பெரிய படங்களின் வசூல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இப்படியான டிக்கெட் கட்டண உயர்வினால்தான் அவர்கள் 1000 கோடி, 1500 கோடி என பிரமோஷன் செய்து வருகிறார்கள். இனி அப்படி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது அந்தப் படத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வு, சிறப்புக் காட்சிகள் அனுமதி கிடைக்காது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். 'கேம் சேஞ்சர்' படத்தின் தயாரிப்பாளராக அவர் இருப்பதால் எப்படியும் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.