திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ‛புஷ்பா' படத்திற்காக ராஷ்மிகா, ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாகவும், 2ம் பாகத்திற்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் தகவல் பரவியது. இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. 'புஷ்பா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.