மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் இரண்டாம் பாகம் ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரில் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னை, கொச்சி, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ‛புஷ்பா' படத்திற்காக ராஷ்மிகா, ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாகவும், 2ம் பாகத்திற்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் தகவல் பரவியது. இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்துகொள்ளவில்லை. 'புஷ்பா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.