நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் வெறும் ஐந்தே படங்களில் இயக்குனர் ஷங்கருக்கு அடுத்த இடத்தில் பேசப்படும்படியான மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற படத்தை இயக்கி வருகிறார். வழக்கம்போல இந்த படத்திலும் ரஜினியுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் என்றால் நடிகர் நாகார்ஜூனா தான். தமிழில் ரட்சகன், பயணம், தோழா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது ஆரம்பகால படங்களான உதயம், இதயத்தை திருடாதே படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்களின் இதயத்தை திருடியவை தான். அந்த வகையில் தோழா படத்திற்கு பிறகு முற்றிலும் புதிய ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் நாகர்ஜுனா.
இந்த படத்தில் லோகேஷ் கனகராஜூடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட நாகார்ஜுனா கூறும்போது, “லோகேஷ் கனகராஜ் உடன் வேலை பார்ப்பதில் நான் ரொம்பவே உற்சாகமடைகிறேன். அவர் திரைக்கதை உள்ளிட்ட மற்ற அனைத்திலுமே தான் அடுத்த தலைமுறை இயக்குனர் என்பதை நிரூபித்து வருகிறார். அவரது கதாபாத்திரங்களை நடிப்பது ரொம்பவே புதுமையாக இருக்கிறது. அதற்கான சுதந்திரத்தையும் அவர் கொடுக்கிறார். அங்கே எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஒரு ஹீரோவிடமும் சரி, வில்லன்களிடமும் சரி நீங்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் அவர் சொல்வதில்லை" என்று கூறியுள்ளார்.