'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சதீஷ் இசை அமைத்துள்ளார், தர்வேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது “ஒக்கேனக்கல் பகுதியில் ஆற்றில் மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்கள் பற்றிய கதை. வயலுக்கு வரப்பு போன்று ஆற்றிலும் கற்களை கொண்டு தனி தனி குடும்பங்களுக்கு தனித்தனி பகுதி ஒதுக்கி மீன் பிடிக்கும் கதை. நேராக ஓடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகாக மாறும். இந்த சிற்றருவிகளைத்தான் 'தூவல்' என்கிறார்கள். இந்த தொழிலும், தொழில் சார்ந்த பிரச்னைகளையும் பேசும் படம் இது. தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை களமாகும்” என்றார்.




