கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சதீஷ் இசை அமைத்துள்ளார், தர்வேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது “ஒக்கேனக்கல் பகுதியில் ஆற்றில் மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்கள் பற்றிய கதை. வயலுக்கு வரப்பு போன்று ஆற்றிலும் கற்களை கொண்டு தனி தனி குடும்பங்களுக்கு தனித்தனி பகுதி ஒதுக்கி மீன் பிடிக்கும் கதை. நேராக ஓடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகாக மாறும். இந்த சிற்றருவிகளைத்தான் 'தூவல்' என்கிறார்கள். இந்த தொழிலும், தொழில் சார்ந்த பிரச்னைகளையும் பேசும் படம் இது. தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை களமாகும்” என்றார்.