விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. மாறுபட்ட காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ''மாநகரம் படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் எனது நண்பரான லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. என்றாலும் அந்த படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இயக்குவார். அப்போது அதில் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே நடிக்க இருந்த அதே வேடத்தில் நானும் கண்டிப்பாக நடிப்பேன்,'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.