என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. மாறுபட்ட காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் 'இரும்புக்கை மாயாவி' படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ''மாநகரம் படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் எனது நண்பரான லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் நானும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. என்றாலும் அந்த படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக இயக்குவார். அப்போது அதில் சூர்யாவுடன் இணைந்து ஏற்கனவே நடிக்க இருந்த அதே வேடத்தில் நானும் கண்டிப்பாக நடிப்பேன்,'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.