நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தி கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுக்க சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார் விஜய். அதனால் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார். அதன் காரணமாக தனது 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்காமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு இயக்குனர் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.