வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் சென்னையில் அவரது இல்லத்தில் தூக்கத்திலேயே காலமானார். இந்திய வான் படையில் பணியாற்றி, கலை துறையில் உள்ள ஈர்ப்பால் நாடகத்தில் பயணித்து, பின்னர் கே பாலசந்தர் இயக்கிய ‛பட்டினப்பிரவேசம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்ரம், நகைச்சுவை என அசத்தி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் இயக்குனர்கள் சந்தான பாரதி, லிங்குசாமி, வெற்றிமாறன், நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, ஸ்ரீமன், செந்தில், ராதாரவி, ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான், சித்ரா லட்சுமணன், மணிகண்டன், சார்லி, சத்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், தேவயானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவரும், நடிகருமான விஜய், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று(நவ., 11) காலை அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்தனர். வான்படை சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
ஒரு நீண்ட நெடிய வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கலைஞன் இன்று நம்மை விட்டு சென்றாலும் அவர் நடித்த படங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்வார்.