சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி |

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன் நேற்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. 700க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சினிமாவுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், மந்திர வாசல், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்றவற்றின் கதையும், வசனமும் இந்திரா சவுந்தராஜனுடடையது. இது தவிர 'அனந்த புரத்து வீடு', தேசிய விருது பெற்ற 'சிருங்காரம்' படத்திற்கு இவர் வசனம் எழுதினார்.
பல இயக்குனர்கள் இவரை நடிக்க அழைத்தும் அதனை மறுத்து வந்த இந்திரா சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு வெளிவந்த 'கட்டில்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வடநாட்டு வியாபாரியாக நடித்தார். அவர் நடித்த முதலும், கடைசி படமும் அதுதான்.
தான் எழுதிய 'சிவம்' என்ற நாவலை தனுஷ் நடிப்பில் சினிமாவாக்க முயற்சித்தார். இதற்காக சில தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார், தனுசை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.




