ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன் நேற்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. 700க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சினிமாவுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், மந்திர வாசல், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்றவற்றின் கதையும், வசனமும் இந்திரா சவுந்தராஜனுடடையது. இது தவிர 'அனந்த புரத்து வீடு', தேசிய விருது பெற்ற 'சிருங்காரம்' படத்திற்கு இவர் வசனம் எழுதினார்.
பல இயக்குனர்கள் இவரை நடிக்க அழைத்தும் அதனை மறுத்து வந்த இந்திரா சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு வெளிவந்த 'கட்டில்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வடநாட்டு வியாபாரியாக நடித்தார். அவர் நடித்த முதலும், கடைசி படமும் அதுதான்.
தான் எழுதிய 'சிவம்' என்ற நாவலை தனுஷ் நடிப்பில் சினிமாவாக்க முயற்சித்தார். இதற்காக சில தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார், தனுசை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.




