லாக் டவுன் கதை இதுவா? | தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி! | 'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி | பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன் |

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.




