ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் திரிஷா. தனது படம் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள், தனது சுற்றுப்பயணங்கள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிடும் திரிஷா அவ்வப்போது வளர்ப்பு பிராணிகள் குறித்தும் பதிவிடுவார். குறிப்பாக தெரு நாய்கள் பற்றி அதிகமாக பதிவிடுவார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு புதிராக இருக்கிறது. பலரும் இதனை ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறார்கள்.அதில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் திரிஷா மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்ல வருகிறார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
திரிஷா, தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' மற்றும் கமல்ஹாசனுடன் 'தக் லைப்' படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.