நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் 'கைதி'. சிறந்த விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிதான் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
அதன் பின் விஜய் நடிப்பில் 'மாஸ்டர், லியோ' படங்களையும் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தையும் இயக்கி, தற்போது ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். 'கைதி' படம் வெளியான பின்பு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி பேசி வந்தார்கள்.
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அது தள்ளிக் கொண்டே போய் வருகிறது. “விரைவில் டில்லி திரும்ப வருவார்” என இன்று அப்படத்தின் ஐந்தாவது வருடத்தில் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது. கார்த்தி சார், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சார்” ஆகியோருக்கும் இதை நடக்க வைக்கும் 'யுனிவர்ஸுக்கும்' நன்றி,” என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரப் பெயர்தான் டில்லி.
எஸ்ஆர் பிரபு தயாரித்த 'மாநகரம்' படம் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார். 'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படம் உருவாகவும் வாய்ப்புள்ளது.