'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு ஒரு குழுவாக சுற்றுலா செல்லும் கேரள இளைஞர்களில் ஒருவர் அங்குள்ள குணா குகையில் தவறி விழுந்துவிட அவரை காப்பாற்ற மற்றவர்கள் எடுக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. அது மட்டுமல்ல பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வரும் கினோபிராவோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ள ஒரே திரைப்படம் இதுதான். இந்த படம் திரையிட்டு முடித்த பிறகு படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் கண் கலங்கினார்கள் என்றும் அதற்கு பிறகு நடந்த கேள்வி பதில் பகுதியில் படத்தின் மேக்கிங் குறித்தும் அந்த குகை உருவாக்கம் குறித்தும் நிறைய கேள்விகளை கேட்டனர் என்றும் அங்கிருந்தபடியே தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.