22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.