ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் 'டாடா'. இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.




