எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து சில படங்கள், என்னென்ன ? | அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் | மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | சிம்பு, அஸ்வந்த் மாரிமுத்து கூட்டணியில் புதிய படம் | அனிரூத், ஸ்ரீலீலா கூட்டணியில் ஆல்பம் பாடல் | அக். 4ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் 'கடைசி உலகப்போர்' |
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கி திரைக்கு வந்த படம் 96. காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, விஜய் சேதுபதி - திரிஷாவின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரேம்குமார். இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம்குமாரிடம் ‛96' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‛‛96 படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவானது. ஆனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் காதல் இல்லாமல் குடும்ப பிரச்னைகளை மையமாகக் கொண்ட உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.