மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். அதிக அளவு இளம் ரசிகர்களை பெற்ற இவர் கடந்த வருடம் வெளியான அனிமல் படத்தில் மிக வித்தியாசமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ராஹா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இருவருமே ராஹா மீது மிகுந்த பாசம் செலுத்தி எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மகள் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள ஆலியா பட் அதில் கூறும் போது, “தனது மகள் உன்னி வா வா என்கிற மலையாள பாடலை கேட்டால் தான் தூங்குகிறாள் என்றும் இதற்காகவே இந்த மலையாள பாடலை தனது கணவர் ரன்பீர் கபூர் கற்றுக்கொண்டு மகளை தூங்க வைப்பதற்காக தினமும் பாடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த சமயத்தில் கவனித்துக் கொண்ட மலையாள செவிலியர் பெண் இந்த பாடலை பாடித்தான் குழந்தையை தூங்க வைப்பாராம். குழந்தையும் அதற்கு பழக்கப்பட்டு விட்டதால் அந்தப் பாடலை அப்படியே தற்போது ரன்பீர் கபூரும் காப்பியடித்து குழந்தையை தூங்க வைக்க பயன்படுத்தி வருகிறாராம். மலையாளிகளின் எவர்கிரீன் பாடலான இந்த பாடலை கே.ஜே யேசுதாஸ் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து பாட மோகன் சித்தாரா இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.