சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். அதிக அளவு இளம் ரசிகர்களை பெற்ற இவர் கடந்த வருடம் வெளியான அனிமல் படத்தில் மிக வித்தியாசமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ராஹா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இருவருமே ராஹா மீது மிகுந்த பாசம் செலுத்தி எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மகள் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள ஆலியா பட் அதில் கூறும் போது, “தனது மகள் உன்னி வா வா என்கிற மலையாள பாடலை கேட்டால் தான் தூங்குகிறாள் என்றும் இதற்காகவே இந்த மலையாள பாடலை தனது கணவர் ரன்பீர் கபூர் கற்றுக்கொண்டு மகளை தூங்க வைப்பதற்காக தினமும் பாடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த சமயத்தில் கவனித்துக் கொண்ட மலையாள செவிலியர் பெண் இந்த பாடலை பாடித்தான் குழந்தையை தூங்க வைப்பாராம். குழந்தையும் அதற்கு பழக்கப்பட்டு விட்டதால் அந்தப் பாடலை அப்படியே தற்போது ரன்பீர் கபூரும் காப்பியடித்து குழந்தையை தூங்க வைக்க பயன்படுத்தி வருகிறாராம். மலையாளிகளின் எவர்கிரீன் பாடலான இந்த பாடலை கே.ஜே யேசுதாஸ் மற்றும் சித்ரா இருவரும் இணைந்து பாட மோகன் சித்தாரா இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.