விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கன்னட நடிகர் தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காதலி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி டார்ச்சர் கொடுத்தார் என்பதால் இந்த காரியத்தை அவர் செய்தார் என சொல்லப்படுகிறது. அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே தனக்கு முறைகேடாக சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதாக வெளியான புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார், இதற்கிடையே அவர் தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதும் அது நிராகரிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது 100 நாள் சிறைவாசத்தை பூர்த்தி செய்துள்ளார் தர்ஷன். இப்போதும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இன்னொரு பக்கம் தர்ஷனின் குடும்பத்தார் தற்போது பெல்லாரி சிறையில் தர்ஷனுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் சிறைத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் சிறை விதிகளுக்கு உட்பட்டு தர்ஷனுக்கு உரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன என்று கூறியுள்ளார்.