'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி |

சினிமா உலகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத டாக்டர் காந்தாராஜ் என்பவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்கமான விஷயங்களை யு-டியூப் சேனல்களில் பேசி வந்தார். குறிப்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் பலர் விபச்சார தொழில் செய்வதாகவும் கூறி அவர்கள் யார் யார் என்கிற விவரத்தையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காந்தராஜ் மீது நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வரும் காந்தா ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பேச்சுகளை யு-டியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் ரோகிணி கூறியுள்ளார்.




