'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
இப்போதெல்லாம் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நீளத்தை குறைப்பதும் கிளைமாக்ஸ் மாற்றுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கூட 'இந்தியன் 2' படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன. இந்த வகையில் வெளியீட்டுக்கு பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம் 'பவளக்கொடி'.
1934ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாகும். எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார்.
படத்தில் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருந்தது. நாயகனும் நாயகியும் சந்திக்கும் போதெல்லாம் பாடல்களாலேயே பேசிக் கொண்டனர்.
அன்றைய ரசிகர்கள் பாடலை ரசித்தாலும் அது கதையோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதினார்கள். இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே சுப்பிரமணியம், பத்து பாடல்கள் வரை குறைத்து, கதைக்கும் வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வெளியிட்டார். அதன் பிறகு படம் பல வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.