'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

இப்போதெல்லாம் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நீளத்தை குறைப்பதும் கிளைமாக்ஸ் மாற்றுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கூட 'இந்தியன் 2' படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன. இந்த வகையில் வெளியீட்டுக்கு பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம் 'பவளக்கொடி'.
1934ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாகும். எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார்.
படத்தில் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருந்தது. நாயகனும் நாயகியும் சந்திக்கும் போதெல்லாம் பாடல்களாலேயே பேசிக் கொண்டனர்.
அன்றைய ரசிகர்கள் பாடலை ரசித்தாலும் அது கதையோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதினார்கள். இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே சுப்பிரமணியம், பத்து பாடல்கள் வரை குறைத்து, கதைக்கும் வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வெளியிட்டார். அதன் பிறகு படம் பல வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.




