கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் அதனை இயக்குனர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில தினங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நிவின் பாலி, அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை இயக்குனர்களான வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர். அந்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டிச., 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசனின் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.