சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் அதனை இயக்குனர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில தினங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நிவின் பாலி, அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை இயக்குனர்களான வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர். அந்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டிச., 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசனின் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.