கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் அதனை இயக்குனர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில தினங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நிவின் பாலி, அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை இயக்குனர்களான வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர். அந்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டிச., 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசனின் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.