'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பட்டியலிட்டு வருவதால் அந்த சினிமாவே கதி கலங்கி உள்ளது.
இதுபற்றி நடிகை நிவேதா தாமஸ் கூறுகையில், ‛‛ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. சினிமாவில் பெண்கள் வீட்டில் இருப்பதை விட வேலை செய்யும் இடத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். எனவே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மலையாள சினிமாவை போல் மற்ற சினிமா துறையிலும் ஹேமா கமிஷன் வர வேண்டும்'' என்கிறார்.