பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 600 கோடிக்கு மேல் அப்படம் வசூலித்த நிலையில், அதையடுத்து ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படத்தை அடுத்து மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் கதை திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதைவைத்து பார்க்கையில் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.