ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 600 கோடிக்கு மேல் அப்படம் வசூலித்த நிலையில், அதையடுத்து ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படத்தை அடுத்து மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் கதை திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதைவைத்து பார்க்கையில் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.