'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. தற்போது ஓடிடியிலும் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். இதுபற்றி நிதிலன் அவரது சமூக வலைதள பக்கத்தில், " சிலம்பரசன் சார், மகாராஜா படத்தை பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தை குறித்து ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தம் மற்றும் ரொம்ப எளிமையாக இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.