பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தி கோட் படத்தில் நடித்து முடித்திருக்க்கிறார் விஜய். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க உள்ளார். சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் தேடி வந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.