தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பாடலுடன் கதையாக சொல்கிறவர்கள் 'பாகவதர்' என்று அழைக்கப்பட்டார்கள். நடனம், தெருக்கூத்து, நாடகம், சினிமாவுக்கெல்லாம் முன்பு மக்களை மகிழ்ச்சி படுத்தியவர்கள் இந்த பாகவதர்கள்தான். தூய தமிழில் சொன்னால் 'கலை சொல்லிகள்'. பாகவதர்களாக ஆண்களே இருந்த காலத்தில் முதன் முதலாக வந்த பெண் சரஸ்வதி பாய்.
இவர் துணிச்சலுடன் ஆண்களுக்கு நிகராக கதை சொன்னார். அவருக்கு துணையாக அதாவது ஒத்து ஊதுகிறவராக அவரது சகோதரி ராதா பாய் இருந்தார். இருவரும் தமிழ்நாடு முழுக்க போகாத ஊர் இல்லை. கதை சொல்லாத கோவில் இல்லை. இதனால் சரஸ்வதி பாயை 'லேடி பாகவதர்' என்று அழைத்தார்கள்.
பாடலில் புகழ்பெற்றவர்கள் சினிமாவில் அறிமுகமாகி கொண்டிருந்தபோது பாகவதரான இவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். 1934ம் ஆண்டு வெளிவந்த 'பாமா விஜயம்' படத்தில் சகோதிரிகள் இருவரும் அறிமுகமானார்கள். கிருஷ்ணரின் மனைவிகளான பாமா, ருக்மணியின் கதையாக இந்த படம் உருவானது. இதில் பாமாவாக ராதா பாயும், ருக்மணியாக சரஸ்வதி பாயும் நடித்தார்கள். இவர்களுடன் ஜி.என்.பாலசுப்ரமணியம் முக்கிய வேடத்தில் நடித்தார். கே.தியாகராஜ தீட்சிதர் இசை அமைத்தார். படத்தில் மொத்தம் 59 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. மாணிக் லால் தாண்டன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சரஸ்வதி சகோதரிகள் ஒரு சில படங்களில் நடித்ததாகவும், கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்ததாகவும் சொல்வார்கள்.