துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அண்ணா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை கவர்ந்து வரும் இந்த தொடரில் வருகிற ஞாயிற்றுகிழமை சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபர்பபாக உள்ளது. இந்த எபிசோடில் மக்கள் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். அயலி வெப் தொடர் மற்றும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து கலக்கிய காயத்ரி அப்பத்தாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்த பார்வதி, டபுள் ஆக்ஷனில் சரவணன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் செந்திலுக்கு ஜோடியாக கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.