நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
அண்ணா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள் மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை கவர்ந்து வரும் இந்த தொடரில் வருகிற ஞாயிற்றுகிழமை சிறப்பு எபிசோடு ஒன்று ஒளிபர்பபாக உள்ளது. இந்த எபிசோடில் மக்கள் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்கள் என்ட்ரி கொடுக்க உள்ளனர். அயலி வெப் தொடர் மற்றும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து கலக்கிய காயத்ரி அப்பத்தாவாக அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்த பார்வதி, டபுள் ஆக்ஷனில் சரவணன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் செந்திலுக்கு ஜோடியாக கோப்பெருந்தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் சண்டே ஸ்பெஷல் எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.