சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா |
சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் தவிர அதிக அளவில் ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்தவர். ஹாலிவுட் படங்கள், தெலுங்கு, மலையாளப் படங்கள் என கடந்த 32 வருடங்களாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
சற்றுமுன் அறிவிக்கப்பட்ட 2022ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 70வது தேசிய விருதுகளில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக வென்றுள்ளார். அவர் பெறும் 7வது தேசிய விருது இது.
இதற்கு முன்பு முதல் முறையாக அவர் அறிமுகமான 'ரோஜா' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதற்கடுத்து 'மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை' ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.
2010ம் ஆண்டு முதல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் “சிறந்த பாடல்களுக்காக, சிறந்த பின்னணி இசைக்காக” என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின் ஏஆர் ரஹ்மான் 'மாம்' ஹிந்திப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், தற்போது 'பொன்னியின் செல்வன் 1' படத்திற்காக மீண்டும் அதே விருதையும் பெற்றுள்ளார்.