சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

முன்னணி கன்னட நடிகராகன தர்ஷன் தனது காதலி பவித்ரா கவுடாவை கடுமையாக விமர்சித்ததற்காக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கூலிப்படையை ஏவி படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்த வழக்கு நல்ல ஸ்டிராங்காக இருப்பதாகவும், அவர் தப்பிக்க வழியே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தர்ஷன் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக கன்னட நடிகர் சங்கத்தினர் நேற்று சாமராஜ்நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் நடிகர்கள் ஜக்கேஷ், தொட்டண்ணா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயமாலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொலை வழக்கில் சிக்கிய நடிகருக்காக பூஜை செய்யலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "இந்த பூஜை கன்னட திரையுலகம் வளர்ச்சி வேண்டி மேற்கொள்ளப்பட்டது. அண்மைக்காலமாக திரையுலகிற்கு சில சிக்கல்கள் வந்துள்ளன. அதிலிருந்து விடுபட்டு மீண்டும் உச்சநிலையை அடைய வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். அதற்காகவே சிறப்பு ஹோமம் நடத்தினோம். தர்ஷனுக்காக மட்டுமே நடத்தினோம் என கூறுவதை ஏற்க முடியாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.




