'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! |

பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். இருவரும் சேர்ந்து தான் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார்கள். கணேசன் பெயருக்கு முன்னால் 'சிவாஜி' வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் 'காக்கா' வந்தது எப்படி தெரியுமா?
'மங்கையர்க்கரசி' படத்தில் ராதா கிருஷ்ணன் நடிக்கும் போது அந்தப் படத்தில் அவரது அம்மா மன்னரை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அவரை "காக்கா புடிடா காக்கா புடிடா" என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பார். இதை தவறாக புரிந்து கொள்ளும் ராதா கிருஷ்ணன் பல நாட்கள் அலைந்து திரிந்து நிஜமாகவே ஒரு காக்காவை பிடித்துக் கொண்டு வந்து தனது அம்மாவிடம் கொடுப்பார். 'போடா மடப்பயலே... மகாராஜாவைக் காக்கா புடிடான்னா.... நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே'னு திட்டுவார்.
இந்த காமெடி காட்சி அப்போது மிகவும் பிரபலம். இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ராதா கிருஷ்ணணை 'காக்கா ராதாகிருஷ்ணன்'னு கூப்பிட ஆரம்பித்தார். பின்னர் அதுவே பெயராகிவிட்டது.