ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். இருவரும் சேர்ந்து தான் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார்கள். கணேசன் பெயருக்கு முன்னால் 'சிவாஜி' வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் 'காக்கா' வந்தது எப்படி தெரியுமா?
'மங்கையர்க்கரசி' படத்தில் ராதா கிருஷ்ணன் நடிக்கும் போது அந்தப் படத்தில் அவரது அம்மா மன்னரை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அவரை "காக்கா புடிடா காக்கா புடிடா" என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பார். இதை தவறாக புரிந்து கொள்ளும் ராதா கிருஷ்ணன் பல நாட்கள் அலைந்து திரிந்து நிஜமாகவே ஒரு காக்காவை பிடித்துக் கொண்டு வந்து தனது அம்மாவிடம் கொடுப்பார். 'போடா மடப்பயலே... மகாராஜாவைக் காக்கா புடிடான்னா.... நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே'னு திட்டுவார்.
இந்த காமெடி காட்சி அப்போது மிகவும் பிரபலம். இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ராதா கிருஷ்ணணை 'காக்கா ராதாகிருஷ்ணன்'னு கூப்பிட ஆரம்பித்தார். பின்னர் அதுவே பெயராகிவிட்டது.