சாராவை தவறான நோக்கத்தில் கட்டிப்பிடிக்கவில்லை : பாலிவுட் நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் | தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ் | ‛பார்டர் 2'வில் வருண் தவான் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர் | மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா | ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா | 47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா | அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி | தாத்தாவாக நடிக்க மாட்டேன், அப்பாவுடன் நடிக்க ஆசை : விக்ரம் பிரபு | ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய ஜீ தமிழ் | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் |

பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பால்ய நண்பர். இருவரும் சேர்ந்து தான் நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார்கள். கணேசன் பெயருக்கு முன்னால் 'சிவாஜி' வந்த கதை எல்லோருக்கும் தெரியும். ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் 'காக்கா' வந்தது எப்படி தெரியுமா?
'மங்கையர்க்கரசி' படத்தில் ராதா கிருஷ்ணன் நடிக்கும் போது அந்தப் படத்தில் அவரது அம்மா மன்னரை கைக்குள் போட வேண்டும் என்பதற்காக அவரை "காக்கா புடிடா காக்கா புடிடா" என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பார். இதை தவறாக புரிந்து கொள்ளும் ராதா கிருஷ்ணன் பல நாட்கள் அலைந்து திரிந்து நிஜமாகவே ஒரு காக்காவை பிடித்துக் கொண்டு வந்து தனது அம்மாவிடம் கொடுப்பார். 'போடா மடப்பயலே... மகாராஜாவைக் காக்கா புடிடான்னா.... நிஜக் காக்காவைப் புடிச்சிட்டு வந்திருக்கியே'னு திட்டுவார்.
இந்த காமெடி காட்சி அப்போது மிகவும் பிரபலம். இந்தக் காட்சியைப் பார்த்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ராதா கிருஷ்ணணை 'காக்கா ராதாகிருஷ்ணன்'னு கூப்பிட ஆரம்பித்தார். பின்னர் அதுவே பெயராகிவிட்டது.




