நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

கேரளாவில் பெய்த பெரும் மழையால் வயநாடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கேரளா மாநிலத்திற்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் தனது பங்கிற்கு முதல் ஆளாய் ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதை வழங்கி உள்ளார்.
கடந்த 2018-லும் கேரளாவில் ஏற்பட்ட மழை பாதிப்பின் போது விக்ரம் ரூ.35 லட்சம் நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமை தொடர்ந்து மேலும் பல தமிழ் திரைப் பிரபலங்களும் நிதி உதவி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




