சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலிருந்து அந்தகன் ஆன்தம் என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் வெளியிட்டார். அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலின் இசை என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ அல்ல” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து, ‛‛வரலாற்றில் முதன்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறது. இது என் பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை'' என பதிவிட்டுள்ளார்.
அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால் அவரே இது நான் போட்ட இசை அல்ல என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது உள்ளது.