'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் | சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கலையரசனின் மகள்! | 'டாக்சிக்' படத்தில் ரெபேக்கா ஆக தாரா சுட்டாரியா! | விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம் 2' படம் நிறுத்தி வைப்பு! : தயாரிப்பாளர் தகவல் | நிவின் பாலியின் முதல் 100 கோடி படம் 'சர்வம் மாயா' | தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பில் இயக்குனர் பாரதிராஜா | ராகவேந்திரா மண்டபம் உருவாக காரணமானவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த் பேச்சு | உறுதியான 'பகவந்த் கேசரி' ரீமேக், மற்ற மொழிகளில் வரவேற்பு இருக்குமா? |

யுவன் சங்கர் ராஜா 'யு1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் நாளை மாலை (27ம் தேதி) சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் எனும் நிறுவனம் இதை நடத்துகிறது. பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம்சி சனா உள்ளிட்ட பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள். முதன் முறையாக வெளிநாட்டு பாணியில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுகிறது அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடுகிறார்.
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும், ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். அதனால் 360 டிகிரி மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.
எனது இசை பயணத்தில் நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். என்னை பற்றி வரும் விமர்சனங்களை இலகுவாக எடுத்துக் கொள்வேன். அவற்றை கவனிப்பேன். என்னுடைய பாடல்கள் எல்லாமே ஹிட்டாவதில்லை. மக்களுக்கு சில பாடல்கள் பிடிக்காமல் போகிறது. அது ஏன் என்பதை விமர்சனங்கள், ரசிகர்களின் கமெண்டுகள் மூலம் அறிந்து கொண்டு என்னை மாற்றிக் கொள்வேன். என்றார்.